search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சரபேஸ்வரர்
    X
    சரபேஸ்வரர்

    கடன் தொல்லை விலக வழிபட வேண்டிய சரபேஸ்வரர்

    திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபேஸ்வரரை, 11 வாரங்கள் தொடர்ச்சியாக, 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் கடன் தொல்லைகள் அகலும்.
    கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில், மயிலாடுதுறை வழித் தடத்தில் இருக்கிறது ‘திருபுவனம்.’ இங்கு கம்பகரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன்- கம்பகரேஸ்வரர், இறைவி- அறம்வளர்த்த நாயகி. இந்த ஆலயத்தில் சரபேஸ்வரருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

    பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரப பட்சியின் வடிவத்தை சிவபெருமான் எடுத்தார். இந்த பறவையானது, சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபமாக கருதப்படுகிறது. சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபேஸ்வரரை, 11 வாரங்கள் தொடர்ச்சியாக, 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும்.

    அதோடு கடன் தொல்லைகள் அகலும். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரமானது, இவரை வழிபட சிறந்த நேரமாகும்.
    Next Story
    ×