என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அதானி பவார் சந்திப்பு குறித்து ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், "நான் சரத் பவாரிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் இந்தியாவின் பிரதமர் அல்ல. அவர் கவுதம் அதானியை காக்கவும் இல்லை" என பதிலளித்தார்.

    மறைமலைநகரில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் 4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றுள்ளனர். ஆய்வு கூட்டத்தில் 28 துறைகளை சார்ந்த மாவட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரெங்கபாளையம் பட்டாசு கடையில் நேற்று நடந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். சிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்தில் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் ராம்குமார், மேற்பார்வையாளர் கனகராஜ் ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசாமீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் காசாவில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது. பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட்கள் குறி தவறி மருத்துவமனை மீது விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது நேற்று குண்டுகளை வீசின. தெற்கு காசா நகரங்களான ரபா மற்றும் கான் யூனிசில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் படையினரின் வான்வழித் தாக்குதலால் காசா மக்கள் திக்கு தெரியாமல் திண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக எகிப்து உதவி பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளது.

    மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 'சி' பிரிவு - கெசட் ரேங்க் இல்லாத 'பி' பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.

    "சிமெண்ட் மற்றும் எக்கு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் 'ரகசிய கூட்டமைப்பு' ஒன்றை உருவாக்கி விலை குறையாமல் பார்த்து கொள்கின்றன" என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு சந்திப்பில் உரையாற்றும் போது குற்றம் சாட்டினார். 

    இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசியில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் தான் நடத்திய பேச்சு வார்த்தை விவரங்களையும் அவருடன் பகிர்ந்து கொண்டார்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, உபேர் டிரைவர்கள் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டிரைவர்கள் போராட்டம் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் யூரோ கால்பந்து தொடரின் தகுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. அப்போது, பைக்கில் வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார். இந்த கொடூர தாக்குதலில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பெல்ஜியம் பிரதமர், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ×