என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    'சந்திரயான்-3' விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மதியம் 2.35 மணிக்கு சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

    பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 22-ந்தேதி தொடங்குகிறது. 26-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் மீண்டும் 28ந்தேதி முதல் 3 கட்டங்களாக பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக, இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டார். இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு பிரான்ஸ் சென்றடைவார்.

    தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. நவ.10-ந்தேதி செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. தென் மாவட்ட ரெயில்களில் புக்கிங் தொடங்கிய சில நொடிகளிலேயே வெயிட்டிங் லிஸ்ட் வந்ததால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    தமிழகம், ஆந்திரா, குஜராத், கர்நாடகா உள்பட 22 மாநிலங்களுக்கான மாநில பேரிடர் நிதியாக 7,532 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி பேரிடர் காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பெரிதும் உதவும்.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே இந்தியா அசத்தலாக பந்து வீசியது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆலிக் அதானஸ் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. சுரேஷ் குமார், அதீக் ரஹ்மான், முகேஷ் அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.

    இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை இழிவுபடுத்தும் சமீபத்திய செயல்களை கண்டித்தும், அதுபோன்ற செயல்களை கடுமையாக நிராகரித்தும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. மத வெறுப்பை எதிர்த்து பாகிஸ்தான் தாக்கல் செய்த இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் காணொலி காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ந்தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சவாரிக்கு வருவதாக கூறி விட்டு பின்னர் வர மறுத்தால் சம்பந்தப்பட்ட ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக்கேட்புக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார். மேலும், திமுகவைப் பொறுத்தமட்டில் பொது சிவில் சட்டமே நிறைவேற்றக்கூடாது என்பதுதான் இறுதியான, தீர்க்கமான கொள்கை பிரகடனம். பாஜகவின் ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு என்ற கொள்கையின் விளைவாக பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும். சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகள் இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    ×