என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஓய்வு ஒழிச்சலின்றி செய்யப்படும் இடைநிறுத்தம் இல்லாத ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இனி முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாக். ராணுவ அதிபர் சையத் அசிம் முனிர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வில் மோடிக்கு அடுத்து நம்பர் 2. இடத்தில் உள்ளவருமான அமித் ஷா இதுவரை பாதிக்கப்பட்ட இரு இனத்தை சேர்ந்த மக்களையும் சந்திக்காதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    குன்னூர் அருகே சுற்றுலா பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் ரூ.1,695க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு நாளை சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை போல் இயக்கப்படும்.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பரவலாக பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    ஆதித்யா எல்-1 விண்கலம் இதுவரை 9.2 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த விண்கலம் புவி ஈர்ப்பு மண்டலத்திற்கு வெளியே வெற்றிகரமாக பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது. 

    புது டெல்லியில் தற்போது உள்ள தேசிய அருங்காட்சியகம் வேறொரு இடத்திற்கு மாற்றப்படுகிறது. முன்னதாக அந்த அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து காட்சி பொருட்களும் வேறொரு இடத்திற்கு இந்த வருட இறுதிக்குள் இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது.

    தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த அணிக்கு எதிராக வலுவான புதிய கூட்டணியை அமைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பதால் அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி வேகப்படுத்தி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இந்த நிலையில் இன்று பிற்பகல் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரில் நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதற்கு பிறகு பிலாஸ்பூர் நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    உ.பி.யில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் அமர்ந்திருந்த பா.ஜ.க. எம்.பி. சதீஷ், தனக்கு அருகே அமர்ந்திருந்த பா.ஜ.க.வின் பெண் சட்டசபை உறுப்பினர் ஒருவரின் தோளில் கை போட்டார். இந்த அநாகரீகமான செய்கையை அடுத்து அப்பெண் எம்.எல்.ஏ. தனது இருக்கையை மாற்றி அதே மேடையில் வேறொரு இடத்தில் அமர்ந்து கொண்டார்.

    ×