என் மலர்
புதுச்சேரி

காரைக்காலில் பணம் வைத்து சீட்டு ஆடிய 3 பேர் கைது
- காரைக்காலில் பணம் வைத்து சீட்டு ஆடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 3 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் பறவைபேட் குப்பை கிடங்கு பின்புறம், சிலர் பணம் வைத்து சீட்டு ஆடுவதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, சீட்டு ஆடிய 3 பேர் தப்பி ஓடினர். போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து சோதனைச் செய்தபோது, 3 பேரிடம் ரூ.2,500 பணம், சீட்டு கட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






