search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் கோவில் கிரிபிரகார பாதையில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    திருச்செந்தூர் கோவில் கிரிபிரகார பாதையில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ள காட்சி.

    திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நாளை தொடக்கம்

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

    நாளை 8-ந் தேதி திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுதல், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    2-ம் திருவிழா 9-ந் தேதி முதல் 5-ம் திருவிழாவான 12-ந் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.

    6-ம் திருவிழாவான 13-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் மற்ற காலங்கள் வழக்கம் போல் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்கிறார்.

    7-ம் திருவிழாவான 14-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 5மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும் இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

    திருவிழா காலங்களில் கோவில் கலையரங்கில் காலை மாலை சிறப்பு சமய சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×