search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கும் விடுதியின் ஜிம்மில் போதுமான உபகரணங்கள் இல்லாததால் தனியார் ஜிம்மில் இந்திய அணி
    X

    தங்கும் விடுதியின் ஜிம்மில் போதுமான உபகரணங்கள் இல்லாததால் தனியார் ஜிம்மில் இந்திய அணி

    தங்கும் விடுதியின் ஜிம்மில் உடற்பயிற்சிக்கு போதுமான உபகரணங்கள் இல்லாததால் தனியார் ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இத்தொடரை ஐசிசி நடத்துவதால், வீரர்கள் தங்கும் ஓட்டல் உள்பட எல்லாவிதமான ஏற்பாடுகளையும் அதுதான் பார்த்துக் கொள்ளும்.

    இந்திய அணி வீரர்கள் தங்கும் விடுதியில் உள்ள ஜிம்மில் போதுமான அளவிற்கு உபகரணங்கள் இல்லை என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வெளியில் உள்ள தனியார் ஜிம்மில் இந்திய வீரர்கள் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.



    ஏற்கனவே மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு ஐசிசி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரியாக செய்யாததுதான் காரணம் என்றும், வீரர்கள் பஸ்சில் செல்வதற்குப் பதிலாக ரெயிலில் செல்வதால் ரசிகர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு வீரர்களுக்கு மிகப்பெரிய சோதனையாக உள்ளது என்றும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×