search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களை வந்த வேகத்தில் வெளியேற்றிய பும்ரா
    X

    தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களை வந்த வேகத்தில் வெளியேற்றிய பும்ரா

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி ஆட்டக்காரர்களை பும்ரா வந்த வேகத்தில் வெளியேற்றினார்.
    சவுத்தாம்டன்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று சவுத்தாம்டனில்  நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற  தென் ஆப்பிரிக்கா அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து  இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.

    தொடக்க ஆட்டக்காரராக ஹஷிம் அம்லா மற்றும் குவின்டன் டி காக் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர்.  

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஷிம் அம்லா மற்றும் குவின்டன் டி காக் ஆகியோரது விக்கெட்களை பும்ரா அடுத்தடுத்து கைப்பற்றினர்.  

    பவர் பிளேயில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை  கைப்பற்றியுள்ளார்.  தென் ஆப்பிரிக்கா அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன்களுடன் ஆடிவருகின்றனர்.
    Next Story
    ×