என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.அதிரடியாக ஆடிய சோலி டிரையோன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஈஸ்ட் லண்டன்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது.

    ஈஸ்ட் லண்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்தது. ஹர்லீன் டியோல் 46 ரன்னும் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய சோலி டிரையோன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • ஜூனியர் டி20 உலக கோப்பையை இந்திய பெண்கள் அணி முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது.
    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    முதலில் பேட் செய்த இங்கிலாந்து 17.1 ஓவரில் 68 ரன்னில் சுருண்டது. சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.

    இந்தியாவின் திதாஸ் சாது ஆட்ட நாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர் நாயகி விருதையும் (மொத்தம் 293 ரன் மற்றும் 9 விக்கெட்) பெற்றனர்.

    பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய இளம் படை அறிமுக உலக கோப்பை தொடரிலேயே பட்டம் வென்று சாதித்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

    இந்நிலையில், உலக கோப்பையை கைப்பற்றி தேசத்துக்கு மகத்தான பெருமை சேர்த்துள்ள இந்திய பெண்கள் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்தார். ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், வெற்றியைக் கொண்டாடும் வகையில் வரும் 1-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா, நியூசிலாந்து இடையிலான கடைசி டி20 போட்டியை நேரில் பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

    • 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
    • இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என கைப்பற்றியது.

    புளோம்பாண்டீன்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 80 ரன்னும், கேப்டன் ஜோஸ் பட்லர் 94 ரன்னும் மொயீன் அலி 51 ரன்னும் விளாசினர்.

    343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. கேப்டன் பவுமா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 109 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர் 58 ரன்னும், மார்கோ ஜேன்சன் 32 ரன்னும் எடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 49.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 347 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பவுமாக்கு வழங்கப்பட்டது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என கைப்பற்றியது.

    இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 1-ம் தேதி நடக்கிறது.

    • முதல் அரையிறுதியில் இந்தியாவும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்தும் வென்றது.
    • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    போட்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த முதலாவது அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ஷபாலி வர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 107 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்தியா 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடக்க வீராங்கனை சுவேதா செராவத் 61 ரன்னுடனும், திரிஷா 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 3 விக்கெட்டு வீழ்த்திய பார்ஷவி சோப்ரா ஆட்டநாயகி விருது பெற்றார்.

    மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய இங்கிலாந்து 19.5 ஓவரில் 99 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.4 ஓவரில் 96 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஹன்னா பாகேர் 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகியாக ஜொலித்தார்.

    இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    https://www.dailythanthi.com/Sports/Cricket/india-england-clash-in-junior-womens-20-over-world-cup-cricket-final-today-888357

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 99 ரன்னில் ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 96 ரன்னில் சுருண்டது.

    போப்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

    டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 99 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 25 ரன்னும், கேப்டன் கிரேஸ் 20 ரன்னும், ஜோசி குரோவ்ஸ் 15 ரன்னும், செரேன் ஸ்மேல் 10 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

    அதன்பின் ஆடிய ஆஸ்திரேலியா அணி 18.4 ஓவரில் 96 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஹன்னா பாகேர் 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகியாக ஜொலித்தார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 298 ரன் குவித்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 271 ரன் மட்டுமே எடுத்தது.

    கேப் டவுன்:

    இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. வான் டெர் டுசன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்தின் சாம் கர்ரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் பொறுப்புடன் ஆடி சதடித்தார். அவர் 113 ரன்னில் அவுட்டானார். டேவிட் மலான் 59 ரன் எடுத்து வெளியேறினார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இங்கிலாந்து 271 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 27 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் நூர்ஜே 4 விக்கெட்டும், சிசந்த மகளா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    • பெண்கள் ஜூனியர் உலக கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
    • இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது.

    கேப் டவுன்:

    19 வயதுக்கு உட்பட்ட முதலாவது மகளிர் டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஷபாலி வர்மா தலையிலான இந்திய அணி கலந்து கொண்டு ஆடி வருகிறது.

    குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை, அமெரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ருவாண்டா அணிகளும், குரூப் சி பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் டி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, யுஏஇ, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இதிலிருந்து இந்தியா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, யுஏஇ, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ருவாண்டா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

    சூப்பர் 6 சுற்றின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

    • முதலில் ஆடிய பிரிடோரியா கேப்பிடல்ஸ் 20 ஒவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது.
    • பின்னர் ஆடிய எம்.ஐ. கேப்டவுன் 18.1 ஓவரில் 130 ரன்னில் சுருண்டது.

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் 'லீக்' கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பிரிடோரியா கேப்பிடல்ஸ் அணி 52 ரன் வித்தியாசத்தில் எம்.ஐ. கேப்டவுனை வீழ்த்தியது.

    முதலில் ஆடிய பிரிடோரியா கேப்பிடல்ஸ் 20 ஒவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. பின்னர் ஆடிய எம்.ஐ. கேப்டவுன் 18.1 ஓவரில் 130 ரன்னில் சுருண்டது. பிரிட்டேரியா கேப்பிடல்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும்.

    இன்றைய போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்-பாரல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர்கிங்ஸ்-டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. கலர்ஸ் தமிழ் சேனலில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிரப்பு செய்யப்படுகிறது.

    • முதலில் ஆடிய இலங்கை 59 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 7.2 ஓவரில் 60 ரன்கள் எடுத்து வென்றது.

    போட்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

    2-வது சுற்றில் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் என்ற அடிப்படையில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. சூப்பர் சிக்சில் தனது இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை நேற்று எதிர்கொண்டது.

    முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. விஷ்மி குணரத்னே அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் பர்ஷவி சோப்ரா 4 விக்கெட்டும், மன்னட் காஷ்யப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் களமிறங்கிய இந்தியா 7.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சவுமியா திவாரி 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது.
    • இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.

    இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. அறிமுக வீராங்கனையான அமன்ஜோட் கவூர் 30 பந்தில் 41 ரன் எடுத்தார். யாஸ்திகா பாட்டியா 35 ரன்னும், தீப்தி சர்மா 33 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களே எடுத்து முடிந்தது. இதனால் இந்தியா 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், தேவிகா வைதியா 2 விக்கெட்டும், கைப்பற்றினர்.

    இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    • முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெடடுக்கு 127 ரன் எடுத்தது.
    • இன்று நடக்கும் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ்- பிரிடோரியோ கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    6 அணிகள் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்க லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் பர்ல் ராயல்ஸ் அணியை ஈஸ்டர்ன் கேப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய ஈஸ்டர்ன் கேப் அணி 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து வென்றது.

    இன்று நடக்கும் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ்- பிரிடோரியோ கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.

    • அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹசீம் ஆம்லா அறிவித்துள்ளார்.
    • எஸ்.ஏ. டி20 போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி பேட்டிங் பயிற்சியாளராக ஆம்லா பணியாற்றி வருகிறார்.

    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்கா வீரரான ஹசீம் ஆம்லா, எஸ்.ஏ. டி20 போட்டியில் எம்.ஐ. கேப்டவுன் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹசீம் ஆம்லா தற்போது அறிவித்துள்ளார்.

    ஹசீம் ஆம்லா தென் ஆப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,282 ரன்களை சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 46.4 ஆகும். அதேபோல் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா, 8113 ரன்களை சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 49.46 ஆகும். மேலும் , 44 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

    2019 உலக கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிறகு கவுன்டி, டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். கவுன்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடினார். கடந்த வருடம் கவுன்டி சாம்பியன்ஷிப்பை சர்ரே அணி வென்றது.

    ×