search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ராணுவத்தை திரும்ப பெறுவது குறித்து இந்தியா-மாலத்தீவு இடையே பேச்சுவார்த்தை
    X

    ராணுவத்தை திரும்ப பெறுவது குறித்து இந்தியா-மாலத்தீவு இடையே பேச்சுவார்த்தை

    • முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, இந்திய ராணுவம் மாலத்தீவிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவித்தார்.
    • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அணிசேரா அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இன்று தொடங்குகிறது. அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கம்பாலா சென்றார். அங்கு மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் "இரு நாடு உறவுகள் பற்றி வெளிப்படையாக உரையாடினோம்., மேலும் அணிசேரா அமைப்புத் தொடர்பான விவகாரம் குறித்தும் விவாதித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

    மலாத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் தனது எக்ஸ் பக்கத்தில், "அணிசேரா அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இடையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவது, மாலத்தீவில் நடந்து கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துவது, சார்க் மற்றும் அணிசேரா அமைப்பின் ஒத்துழைப்பு குறித்து உரையாடினோம். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி விரிவாக்குவது குறித்தும் விவாதித்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2023ம் ஆண்டு மாலத்தீவில் நடந்த தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். சீன ஆதரவாளரான அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ஜனவரி 8-ஆம் தேதி சீனா சென்ற முகமது முய்சு, மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு நாடுகளுக்கும் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பயணத்தினைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தை மாலத்தீவிலிருந்து வெளியேற அறிவுறுத்தும் அறிவிப்பு வந்தது.

    முன்னதாக, இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயண அனுபவம் குறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதுகுறித்து மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் சர்ச்சையான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுகுறித்து முகமது முய்சு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் சர்ச்சை கருத்து தெரிவித்த மூன்று அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் இருநாட்டு அரசுகளுக்கு இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

    மாலத்தீவு உனான உறவு விரிசலுக்கு மத்தியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×