என் மலர்
உலகம்

நேபாளத்திற்கு 40 ஆம்புலன்ஸ்களை பரிசாக வழங்கிய இந்தியா
- கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா நேபாளத்திற்கு ஆம்புலன்ஸ்களை பரிசாக அளித்து வருகிறது.
- 1994 முதல், நேபாளத்திற்கு மொத்தம் 1,049 ஆம்புலன்ஸ்களை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
நேபாளத்திற்கு 40 ஆம்புலன்ஸ் வாகனங்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.
காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் உள்பட 4 இடங்களில் வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
நேபாள அரசின் சுகாதாரத் துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக ஆம்புலன்ஸ்களை இந்தியா பரிசளித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா நேபாளத்திற்கு ஆம்புலன்ஸ்களை பரிசாக அளித்து வருகிறது. 1994 முதல், நேபாளத்திற்கு மொத்தம் 1,049 ஆம்புலன்ஸ்களை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
மேலும், 2022 ஆம் ஆண்டில் நேபாள கல்வி நிறுவனங்களுக்கு 300 பள்ளி பேருந்துகளையும் இந்தியா வழங்கியுள்ளது.
Next Story