என் மலர்
உலகம்

பயங்கரவாதம் வெறிபிடித்த நாய் என்றால், அதை மோசமாக கையாளும் பாகிஸ்தான்: அபிஷேக் பானர்ஜி பேச்சு..!
- நாங்கள் பயத்திற்கு அடிபணிய மாட்டோம்.
- அவர்களுக்குப் புரியும் மொழியில் பதிலளிக்க கற்றுக்கொண்டோம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கடந்த 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் இணைந்து துல்லியமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் இந்தியா எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அத்தடன் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்தியா அதனை முறியடித்து தக்க பதிலடி கொடுத்தது. பின்னர் இருநாட்டு ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கடந்த 10ஆம் தேதி தாக்குதல் நிறுத்தப்பட்டது. இதனால் போர் பதற்றம் தணிந்தது.
இந்தியா பயங்கரவாத செயலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்தது ஏன்?. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி 33 நாடுகளின் தலைநகருக்கு 7 குழுக்கள் சுற்றுப் பயணம் செய்துள்ளது. ஜப்பானுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு சென்றுள்ளது. இந்த குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் பானர்ஜி இடம் பிடித்துள்ளார.
அபிஷேக் சர்மா பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து கூறியதாவது:-
நாங்கள் பயத்திற்கு அடிபணிய மாட்டோம். அவர்களுக்குப் புரியும் மொழியில் பதிலளிக்கக் கற்றுக்கொண்டோம். பயங்கரவாதம் வெறிபிடித்த நாய் என்றால், அதை காட்டுத்தனமாக கையாள்கிறது பாகிஸ்தான். இந்த காட்டுத்தனமான கையாளுபவரை சமாளிக்க நாம் முதலில் உலகை ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில் அது தொடர்ந்து பயங்கரவாதம் என்ற வெறித்தனமான நாய்களை இனப்பெருக்கம் செய்யும்.
இந்தியா பொறுப்புடன் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். எங்கள் அனைத்து பதில்களும் செயல்களும் துல்லியமாகவும், கணக்கிடப்பட்டதாகவும், தீவிரமடையாததாகவும் (இருநாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம்) இருந்தன.
இவ்வாறு அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.






