என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
கொரோனா தடுப்பூசியில் இருந்து தப்பிக்க மகன்களை கடத்திய பெண்
Byமாலை மலர்6 Jan 2022 6:22 AM GMT (Updated: 6 Jan 2022 6:22 AM GMT)
தனது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமா, கூடாதா என்பதை நான் தான் முடிவெடுக்க வேண்டும் என கணவருக்கு கடிதம் எழுதினார்.
மாட்ரிட்
ஸ்பெயின் நாட்டில் 5 முதல் 11 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த 45 வயது பெண்மணி ஒருவர், தனது 14 மற்றும் 12 வயது மகன்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை தடுக்க, அவர்களை கடத்திச் சென்றுள்ளார்.
அந்த பெண்மணி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரது இரு மகன்களும் தந்தையிடம் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் பள்ளி முடிந்து இரு மகன்களையும் அழைத்து சென்ற பெண்மணி, தனது பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமா, கூடாதா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என கணவருக்கு கடிதம் எழுதி தெரிவித்தார்.
இதையடுத்து சிறுவர்களின் தந்தை போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து அந்த பெண் சரணடைந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் அந்த பெண்மணியை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X