என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 தடுப்பூசி போட்டவர்கள் அமெரிக்கா செல்ல அனுமதி: பயண கட்டுப்பாடுகள் நீக்கம்
Byமாலை மலர்6 Nov 2021 1:55 AM GMT (Updated: 6 Nov 2021 1:55 AM GMT)
2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்டிருந்தால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் 8-ந் தேதி முதல் (நாளை மறுதினம்) அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார்கள்.
வாஷிங்டன் :
உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல பயண கட்டுப்பாடுகளை வெளிநாட்டினருக்கு அமெரிக்கா விதித்திருந்தது.
தற்போது ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தள்ளது.
இந்த நிலையில் கொரோனா கால கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:-
* 2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்டிருந்தால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் 8-ந் தேதி முதல் (நாளை மறுதினம்) அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக கொரோனா இல்லை என காட்டுகிற ‘நெகட்டிவ் ’ சான்றிதழை காட்ட வேண்டும். பயணத்துக்கு 3 நாட்கள் முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து இந்த சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
* தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள், அவர்கள் அமெரிக்க குடிமக்களாகவோ, நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாகவோ இருந்தால், ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத வெளிநாட்டினர் சிறிய குழுவினராக இருந்தால், அவர்கள் புறப்பட்ட ஒரு நாளுக்குள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
* தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறுவர், சிறுமியர் தாங்கள் பயணம் செய்கிற பெரியவர்களுடன் அதே நேரத்தில் சோதனை செய்து கொள்ள வேண்டும். ( அதாவது 2 தடுப்பூசிகளும் போட்டுக்கொண்ட பெரியவர்களுடன் பயணத்துக்கு 3 நாட்கள் முன்னதாகவும், தடுப்பூசி போடாத பெரியவர்களுடன் செல்கிறபோது ஒரு நாளுக்குள்ளும்).
உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல பயண கட்டுப்பாடுகளை வெளிநாட்டினருக்கு அமெரிக்கா விதித்திருந்தது.
தற்போது ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தள்ளது.
இந்த நிலையில் கொரோனா கால கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:-
* 2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்டிருந்தால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் 8-ந் தேதி முதல் (நாளை மறுதினம்) அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக கொரோனா இல்லை என காட்டுகிற ‘நெகட்டிவ் ’ சான்றிதழை காட்ட வேண்டும். பயணத்துக்கு 3 நாட்கள் முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து இந்த சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
* தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள், அவர்கள் அமெரிக்க குடிமக்களாகவோ, நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாகவோ இருந்தால், ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத வெளிநாட்டினர் சிறிய குழுவினராக இருந்தால், அவர்கள் புறப்பட்ட ஒரு நாளுக்குள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
* தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறுவர், சிறுமியர் தாங்கள் பயணம் செய்கிற பெரியவர்களுடன் அதே நேரத்தில் சோதனை செய்து கொள்ள வேண்டும். ( அதாவது 2 தடுப்பூசிகளும் போட்டுக்கொண்ட பெரியவர்களுடன் பயணத்துக்கு 3 நாட்கள் முன்னதாகவும், தடுப்பூசி போடாத பெரியவர்களுடன் செல்கிறபோது ஒரு நாளுக்குள்ளும்).
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்..உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.98 கோடியைக் கடந்தது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X