என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோ பைடனுடனான காணொலி காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை - டிரம்ப் அறிவிப்பு
Byமாலை மலர்8 Oct 2020 10:45 PM GMT (Updated: 8 Oct 2020 10:45 PM GMT)
ஜோ பைடனுடன் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள காணொலி காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.
அதிபர் வேட்பாளர்களான தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையேயான முதல் நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ம் தேதி ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்றது.
இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்று சில நாட்களில் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டிரம்ப் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டத்தையடுத்து வெள்ளைமாளிகையில் தனது பணிகளை தொடர்ந்து வருகிறார். ஆனால், அவர் இன்னும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையவில்லை.
இதற்கிடையில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான 2-வது நேரடி விவாத நிகழ்ச்சி புளோரிடா மாகாணத்தில் நடந்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதிபர் டிரம்பிற்கு கொரோனா
உறுதியானதையடுத்து விவாதம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் பைடன் இடையே வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள நேரடி விவாத நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெறும் என அதிபர் தேர்தலுக்கான விவாத ஒருங்கிணைப்பு கமிஷன் நேற்று தெரிவித்தது.
பங்கேற்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜோ பைடனுடன் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ள 2-வது நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் தான் பங்கேற்கப்போவதில்லை என அதிபர் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப்,’காணொலி காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. நேரடி விவாதம் என்பது காணொலி காட்சி மூலம் நடத்தப்படுவதல்ல’ என தெரிவித்தார்.
முன்னதாக, டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையவில்லை என்றால் அவருடன் நேரடி விவாத்தில் ஈடுபடமாட்டேன் என்று ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X