என் மலர்
செய்திகள்

ஒரே நேரத்தில் 11 பேரை பலி வாங்கிய சரக்கு லாரி - டன்சானியாவில் சோகம்
டன்சானியா நாட்டின் பெயா என்ற நகரில் சரக்கு லாரி ஒன்று அடுத்தடுத்து 5 வாகனங்களில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Tanzania
டொடோமா:
டன்சானியா நாட்டின் பெயா நகரில் செங்குத்தான மலைப்பாதை ஒன்றில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த வாகனங்கள் மீது சரக்கு லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது இந்த லாரி மோதியதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டின் அதிபர் ஜான் மகுஃபுலி, இந்த சம்பவம் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், நாட்டின் குடிமக்களை இழந்து வருத்தத்தில் இருப்பதாகவும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டன்சானியாவில் மோசமான சாலை வசதிகள், முறையாக பின்பற்றப்படாத சாலை விதிமுறைகள் ஆகியவற்றால் அங்கு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதே போல், கடந்த ஞாயிறு அன்று நடந்த விபத்து ஒன்றில் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Tanzania
டன்சானியா நாட்டின் பெயா நகரில் செங்குத்தான மலைப்பாதை ஒன்றில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த வாகனங்கள் மீது சரக்கு லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது இந்த லாரி மோதியதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டின் அதிபர் ஜான் மகுஃபுலி, இந்த சம்பவம் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், நாட்டின் குடிமக்களை இழந்து வருத்தத்தில் இருப்பதாகவும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டன்சானியாவில் மோசமான சாலை வசதிகள், முறையாக பின்பற்றப்படாத சாலை விதிமுறைகள் ஆகியவற்றால் அங்கு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதே போல், கடந்த ஞாயிறு அன்று நடந்த விபத்து ஒன்றில் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Tanzania
Next Story






