search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூ மெக்சிகோ பேருந்து விபத்து - பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
    X

    நியூ மெக்சிகோ பேருந்து விபத்து - பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

    அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. #Accident
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அதில் 49 பேர் பயணம் செய்தனர். 

    நியூ மெக்சிகோ நகர் அருகில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையின் எதிரே வந்த டிராக்டர் டிரெயிலர் லாரியின் டயர் திடீரென வெடித்தது இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி பேருந்து மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.  மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சென்ற மீட்பு படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் சிசிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, மெக்சிகோ பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். #Accident
    Next Story
    ×