search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சூடானில் ஐ.நா. அமைதிப்படை மீது தாக்குதல் - வங்காளதேசம் வீரர் பலி

    சூடான் நாட்டில் ஐ.நா. அமைதிப்படை வாகன அணிவகுப்பின் மீது இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வங்காளதேசம் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.
    ஜுபா:

    உள்நாட்டுப்போர் மற்றும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் பன்னாட்டுப் படையை சேர்ந்த அமைதிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வகையில், சூடான் நாட்டிப் தெற்கு பகுதியில் நிவாரண உதவி பொருட்களை கொண்டு சென்ற வாகன அணிவகுப்பின் மீது இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வங்காளதேசம் நாட்டை சேர்ந்த ராணுவ வீரரான லெப்டினண்ட் ஜெனரல் அஷ்ரப் சித்திக்கி என்பவர் உயிரிழந்தார். #UNpeacekeeperkilled #SouthSudanambush
    Next Story
    ×