search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் இ.பி-5 விசா திட்டம் ரத்து? நாடாளுமன்றத்திடம் டிரம்ப் நிர்வாகம் முறையீடு
    X

    அமெரிக்காவின் இ.பி-5 விசா திட்டம் ரத்து? நாடாளுமன்றத்திடம் டிரம்ப் நிர்வாகம் முறையீடு

    அமெரிக்காவின் இ.பி-5 விசா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 10 உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், குறைந்தபட்சம் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 80 லட்சம்) தொழில் முதலீடு செய்கிற வெளிநாட்டினருக்கு ‘இ.பி-5 விசா’ வழங்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் வருகிறவர்களுக்கு ‘கிரீன் கார்டு’ என்ற நிரந்தர சட்டப்பூர்வ குடி உரிமை கிடைக்கிறது.

    இந்த விசா ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு தரப்படுகிறது. ஒரு நாட்டுக்கு அதிகபட்சம் 7 சதவீதம் வழங்கப்படும்.

    ஆனால் இந்த திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், மோசடிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இந்த விசா திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ஒன்று, இந்த விசா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

    இந்த விசா திட்டத்தின் கீழ் அதிகமாக விண்ணப்பிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா, வியட்நாமைத் தொடர்ந்து இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது.

    சீனாதான் அதிகளவில் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×