நைஜீரியாவில் கடத்திச் செல்லப்பட்ட 130 பள்ளிக் குழந்தைகள் மீட்பு

303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து வந்தனர்.
நைஜீரியாவில் கடத்திச் செல்லப்பட்ட 130 பள்ளிக் குழந்தைகள் மீட்பு
Published on

நைஜீரியாவில் பயங்கரவத்திகளால் கடத்தப்பட்ட சுமார் 130 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 21-ஆம் தேதி, நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள புனித மேரி கத்தோலிக்கப் பள்ளியில் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல், 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.

கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து வந்தனர். மீதமுள்ளவர்களை மீட்க ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியது.

இதனைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் 100 மாணவர்கள் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது எஞ்சியிருந்த 130 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக நைஜர் மாகாண போலீஸ் செய்தித் தொடர்பாளர் வாசியு அபியோடன் தெரிவித்துள்ளார். 

ராணுவத்தின் தேடுதல் வேட்டை காரணமாகவே இந்த விடுதலை சாத்தியமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் நிலை குறித்த இதுவரை தகவல் வெளியாகவில்லை.

விடுவிக்கப்பட்ட மாணவர்கள் நைஜர் மாகாணத் தலைநகரான மின்னாவுக்கு அழைத்து வரப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

X

Maalai Malar
www.maalaimalar.com