என் மலர்
செய்திகள்

ஜியோபோன் தயாரிப்பு பணிகள் நிறுத்தம், இது தான் காரணமா?
ரிலையன்ஸ் ஜியோவின் வோல்ட்இ வசதி கொண்ட பீச்சர்போனின் முதற்கட்ட விற்பனை நடைபெற்றுள்ள நிலையில், அதன் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை:
ரிலையன்ஸ் ஜியோவின் வோல்ட்இ வசதி கொண்ட பீச்சர்போன் இந்தியாவில் ஆகஸ்டு மாத வாக்கில் விற்பனை செய்யப்பட்டது. Kai இயங்குதளம் கொண்டு இயங்கும் ஜியோபோன் தயாரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியாகியிள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ சார்பில் புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்பட இருப்பதாகவும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. தற்போதைய ஜியோபோன் Kai இயங்குதளறம் கொண்டிருக்கிறது. இது ஃபயர்ஃபாக்ஸ் இயங்குதளத்தின் ஒரு பதிப்பு என்றும் முதற்கட்ட ஜியோபோன் விற்பனையில் சுமார் 60 லட்சம் யுனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் ஜியோ பீச்சர்போனிற்கென பிரத்தியேக திட்டத்தை ஜியோ வகுத்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனம் கார்பன் மற்றும் செல்கான் நிறுவனங்களுடன் இணைந்து இரண்டு 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.
பாரதி ஏர்டெல் போன்றே வோடபோன் நிறுவனமும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பாரத் 2 ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. ஜியோவுடன் நெருக்கமான நபர் வழங்கியுள்ள தகவல்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஜியோபோன் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்சமயம் ஜியோபோனில் இயங்கும் Kai இயங்குதளத்தில் பிரபல செயலிகளை இயக்கும் வசதி கிடையாது.

இதனால் ஜியோ சார்பில் பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் வாட்ஸ்அப், பேஸ்புக், கூகுள் மற்றும் யூடியூப் போன்ற சேவைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் கூகுள், மற்றும் பேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஜியோபோனின் விலை சார்ந்த தகவல்கல் அறியப்படவில்லை, மேலும் இந்த சாதனத்துடன் வழங்கப்பட இருக்கும் ஜியோ திட்டங்களும் வித்தியாசமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் வோல்ட்இ வசதி கொண்ட பீச்சர்போன் இந்தியாவில் ஆகஸ்டு மாத வாக்கில் விற்பனை செய்யப்பட்டது. Kai இயங்குதளம் கொண்டு இயங்கும் ஜியோபோன் தயாரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியாகியிள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ சார்பில் புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்பட இருப்பதாகவும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. தற்போதைய ஜியோபோன் Kai இயங்குதளறம் கொண்டிருக்கிறது. இது ஃபயர்ஃபாக்ஸ் இயங்குதளத்தின் ஒரு பதிப்பு என்றும் முதற்கட்ட ஜியோபோன் விற்பனையில் சுமார் 60 லட்சம் யுனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் ஜியோ பீச்சர்போனிற்கென பிரத்தியேக திட்டத்தை ஜியோ வகுத்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனம் கார்பன் மற்றும் செல்கான் நிறுவனங்களுடன் இணைந்து இரண்டு 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.
பாரதி ஏர்டெல் போன்றே வோடபோன் நிறுவனமும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பாரத் 2 ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. ஜியோவுடன் நெருக்கமான நபர் வழங்கியுள்ள தகவல்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஜியோபோன் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்சமயம் ஜியோபோனில் இயங்கும் Kai இயங்குதளத்தில் பிரபல செயலிகளை இயக்கும் வசதி கிடையாது.

இதனால் ஜியோ சார்பில் பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் வாட்ஸ்அப், பேஸ்புக், கூகுள் மற்றும் யூடியூப் போன்ற சேவைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் கூகுள், மற்றும் பேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஜியோபோனின் விலை சார்ந்த தகவல்கல் அறியப்படவில்லை, மேலும் இந்த சாதனத்துடன் வழங்கப்பட இருக்கும் ஜியோ திட்டங்களும் வித்தியாசமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






