என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூன் 30: இந்தியாவில் களமிறங்கும் மோட்டோ எக்ஸ் 4
    X

    ஜூன் 30: இந்தியாவில் களமிறங்கும் மோட்டோ எக்ஸ் 4

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன் ஜூன் மாத இறுதியில் இந்திய சந்தையில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்த ஆண்டு மோட்டோரோலாவின் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், மோட்டோ எக்ஸ் மாடலில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இம்மாத இறுதியில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. 

    மோட்டோ எக்ஸ் 4 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் நடுத்தர விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆண்ட்ரி யாதிம் என்பவர் ட்விட்டரில் வெளியிட்ட தகவல்களில் புதிய மோட்டோ எக்ஸ் 4 ஜூன் மாதம் 30-ந்தேதி அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

    இந்திய சந்தையில் ரூ.20,999 என்ற விலையில் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதியை வழங்கும் IP64 சான்று பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, ஸ்மார்ட்போன் சுற்றி கிளாஸ் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.



    மோட்டோ எக்ஸ் 4 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 

    * 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
    * குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
    * 4 ஜிபி ரேம்
    * 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    * 3800 எம்ஏஎச் பேட்டரி
    * கைரேகை ஸ்கேனர்
    * 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர்
    * 13 எம்பி செல்ஃபி கேமரா f/2.2 அப்ரேச்சர்

    மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனுடன் மோட்டோ ஜி5எஸ்+ ஸ்மார்ட்போன் மற்றும் மோட்டோ இசட் 2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ.17,999 மற்றும் ரூ.38,999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×