என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வடலூர் காவல் நிலையத்தில் சீமான் இன்று ஆஜர் ஆவாரா?
    X

    வடலூர் காவல் நிலையத்தில் சீமான் இன்று ஆஜர் ஆவாரா?

    • செங்கல்பட்டு காவல் நிலையத்தில் இருந்தும் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
    • பெரியார் குறித்த சீமானின் பேச்சிற்காக தமிழக முழுவதும் 72 இடங்களில் புகார் அளிக்கப்பட்டது.

    பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில், திராவிடர் கழக கடலூர் மாவட்டச் செயலாளர் தண்டபாணி புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் 192, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு (குற்ற எண் 8/2025) செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து நெய்வேலி டவுன் ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் கடந்த 10-ந்தேதி நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு சென்று பிப்ரவரி 14-ந்தேதி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராவது தொடர்பான சம்மனை கொடுத்தார். வடலூர் காவல் நிலைய சம்மனை தொடர்ந்து செங்கல்பட்டு காவல் நிலையத்தில் இருந்தும் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராவது தொடர்பாக சீமான் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இந்த நிலையில், வடலூர் காவல் நிலையத்தில் சீமான் இன்று ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. பெரியார் குறித்த சீமானின் பேச்சிற்காக தமிழக முழுவதும் 72 இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. அனைத்து புகார்களையும் ஒன்றாக விசாரிக்க வேண்டி நீதிமன்றத்தை அணுக சீமான் முடிவு செய்யதுள்ளார்.

    72 புகார்களுக்கும் நேரில் ஆஜராவதை தவிர்க்க நீதிமன்றத்தை அணுகவும், நீதிமன்றத்தில் அளிக்கப்படும் தீர்ப்பை பொறுத்து ஆஜராக சீமான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×