என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாணவி பாலியல் வன்கொடுமை- ஒருவர் மட்டுமே குற்றவாளி என முடிவுக்கு வந்தது ஏன் ? காவல் ஆணையருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மாணவி பாலியல் வன்கொடுமை- ஒருவர் மட்டுமே குற்றவாளி என முடிவுக்கு வந்தது ஏன் ? காவல் ஆணையருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

    • தலைமை நீதிபதி உத்தரவுக்கு பிறகு வழக்கு விசாரணைக்கு பட்டியிலிடப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
    • உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் இன்று மாலை 4.45 மணியளவில் விசாரணை தொடங்கியது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பெண் வக்கீலான வரலட்சுமியின் கடிதம் ஒன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளான எஸ்.எம். சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்பு இன்று தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

    மனுவில், " சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை உள்நோக்கத்துடன் அவர்கள் கசியவிட்டுள்ளனர். எனவே வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக கோர்ட்டில் வாதாடிய வக்கீல் ஜெய பிரகாஷ் நாராயணன் சென்னையின் இதய பகுதி போன்ற அண்ணா பல்கலைகழகத்தில் நடந்துள்ள பாலியல் சம்பவம் துரதிருஷ்டவசமானது. எனவே ஐகோர்ட்டு இந்த கடிதத்தை ஏற்று தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கோரினார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று பிற்பகலில் வழக்கை விசாரிப்பதாக தெரிவித்து பட்டியலிட அறிவுறுத்தினர்.

    அப்போது தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர், போலீசார் டி.ஜி.பி. சென்னை போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    தலைமை நீதிபதி உத்தரவுக்கு பிறகு வழக்கு விசாரணைக்கு பட்டியிலிடப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் இன்று மாலை 4.45 மணியளவில் விசாரணை தொடங்கியது.

    அப்போது, புலன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என எப்படி முடிவுக்கு வர முடியும் என்று நீதிபதி காவல் ஆணையருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    Next Story
    ×