என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.
- அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து தண்ணீர் குடிக்க வைக்க அரசு பள்ளிகளுக்குபள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு செய்துள்ளது. வகுப்பறைகளை விட்டு மாணவர்கள் வெளியில் செல்லாமல் இருக்கும் இடத்தில் தண்ணீர் குடிக்க 5 நிமிடங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே வாட்டர் பெல் என்ற திட்டம் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






