என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026 தேர்தலில் பணத்தை வண்டி வண்டியாக கொட்டப்போகிறார்கள் - விஜய்
- இதுவரை ஊழலே செய்யாதவர்களை தேர்ந்தெடுக்கக் சொல்லுங்கள்.
- பணம் கொடுத்தாலும் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது.
முதல் கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பங்கேற்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
* படிப்பு சாதனை தான். ஒரே படிப்பில் மட்டும் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.
* நீட் மட்டும் தானா உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் மிக மிக பெரியது.
* ஜனநாயகக் கடமை ஆற்றுங்கள்.
* வீட்டில் உள்ள எல்லோரையும் ஜனநாயகக் கடமையாற்றக் கூற சொல்லுங்கள்.
* இதுவரை ஊழலே செய்யாதவர்களை தேர்ந்தெடுக்கக் சொல்லுங்கள்.
* காசு வாங்கி விட்டு ஓட்டுப்போடும் கல்ச்சரை ஊக்கப்படுத்தாதீர்கள்.
* அடுத்த தேர்தலில் பணத்தை வண்டி வண்டியாக கொட்டப்போகிறார்கள்.
* பணம் கொடுத்தாலும் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியும்.
* சாதி, மத பிரிவினை சிந்தனை உங்களை பிரிவுபடுத்த விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






