என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்த விஜய் வசந்த் எம்.பி.
- 5-ம் நாளான நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
- 4-ம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மங்காவிளை அருள்மிகு சிவசுடலை மாடசுவாமி திருக்கோவிலில் வைகாசி கொடை விழா நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நாளான நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கி அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஊர் நிர்வாக தலைவர், நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம், பூவங்காபறம்பு ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் சித்திரை பொங்காலை திருவிழா மற்றும் கொடைவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.






