என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போலீஸ் கெடுபிடியால் திருச்சியில் பிரசார பாதையை மாற்றும் விஜய்
    X

    போலீஸ் கெடுபிடியால் திருச்சியில் பிரசார பாதையை மாற்றும் விஜய்

    • த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் புதிய பாதையில் தனது பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
    • திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற உள்ள விஜய் பிரசாரத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க. ஏற்றுக்கொண்டது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 13-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து அவர் தனது பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதில் 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் விஜய் முதலில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் புதிய பாதையில் தனது பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

    முதலில் டி.வி.எஸ் டோல்கேட் தொடங்கி தலைமை தபால் நிலையம், பாரதியார் சாலை, மரக்கடை வழியாக சத்திரம் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

    சத்திரம் பேருந்து நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் தற்போது பிரசார பயண பாதையை மாற்றி உள்ள விஜய், டி.வி.எஸ் டோல்கேட்டில் பிரசாரத்தை தொடங்கி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே பேச உள்ளார். சத்திரம் பேருந்து நிலையம் செல்லாமல் காந்தி மார்க்கெட் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து விஜய் அரியலூர் செல்கிறார்.

    திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற உள்ள விஜய் பிரசாரத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க. ஏற்றுக்கொண்டது. ஸ்டார் தியேட்டர், தமிழ்ச்சங்கம் மற்றும் காந்தி மார்க்கெட் ஆகிய 3 இடங்களில் தற்காலிக பார்க்கிங் அமைக்க த.வெ.க. ஒப்புக்கொண்டது.

    Next Story
    ×