வேங்கைவயல் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்- சிபிஐ(எம்) வலியுறுத்தல்

வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.பழிவாங்கும் நோக்கத்துடன் அந்த மக்களே குடிநீரில் மலத்தை கலந்ததாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
வேங்கைவயல் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்- சிபிஐ(எம்) வலியுறுத்தல்
Published on

வேங்கை வயல் வன்கொடுமை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று சிபிஐ(எம்) மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

வேங்கைவயல் வழக்கை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சமூக மக்களே இந்த சம்பவத்திற்கு காரணம் என்பது ஏற்கத்தக்கது அல்ல.

வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பழிவாங்கும் நோக்கத்துடன் அந்த மக்களே குடிநீரில் மலத்தை கலந்ததாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com