என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரை, நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு இன்று முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்
    X

    மதுரை, நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு இன்று முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்

    • நெல்லையில் இருந்து இன்று மாலை புறப்பட்டு நாளை திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
    • மதுரையில் இருந்து இன்று இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நாளை காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை இயக்கப்படுகிறது.

    ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த மக்கள் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு முன்பதிவில்லாத சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06014) நெல்லையில் இருந்து இன்று (அக்டோபர் 5ம் தேதி) மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு நாளை திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

    மேலும் இந்த சிறப்பு ரெயிலானது நெல்லையில் இருந்து 11-உட்காரும் சேர் கார் பெட்டிகள், 4-பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2-பொது இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என மொத்தம் 17 முன்பதிவில்லாத பெட்டிகளுடன் செல்கிறது.

    இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தன், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேலும், மதுரையில் இருந்து இன்று (அக்டோபர்-05) இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம் வழியாக நாளை காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×