என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மகளிர் உரிமைத்தொகை: புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் வழங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்
    X

    மகளிர் உரிமைத்தொகை: புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் வழங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்

    • ஒவ்வொரு மகளிருக்கும் தற்போது வரை ரூ.26ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
    • மகளிர் உரிமைத் தொகை கோரி புதிதாக இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையில் மகளிர் உரிமைத் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    * மகளிர் உரிமைத்தொகையாக இதுவரை 30ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளோம்.

    * ஒவ்வொரு மாதமும் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    * ஒவ்வொரு மகளிருக்கும் தற்போது வரை ரூ.26ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    * இன்னும் அதிக அளவிர் மகளிர் பயனடைய வேண்டும் என்று கருதி நிபந்தனைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

    * மகளிர் உரிமைத் தொகை திட்ட நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தியதால் புதியதாக பல மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி பெற்றனர்.

    * மகளிர் உரிமைத் தொகை கோரி புதிதாக இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    * மகளிர் உரிமைத்தொகை கோரி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பரிசீலனை செய்யப்பட்டு டிசம்பர் 15 முதல் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார்.

    Next Story
    ×