என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா- மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார் விஜய்
- மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
- பரிசை பெற்றுக்கொண்ட மாணவர்களும் விஜய்க்கு நன்றி தெரிவித்து பேசினர்.
சென்னை:
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
இதனை தொடர்ந்து, இன்று 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கிய நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.
இன்று 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையையும் த.வெ.க. தலைவர் விஜய் வழங்க உள்ளார். முன்னதாக, நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்த விஜய்க்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் பரிசை விஜய் வழங்கி வருகிறார். மேலும் மாணவர்களின் குடும்பத்தாருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பரிசை பெற்றுக்கொண்ட மாணவர்களும் விஜய்க்கு நன்றி தெரிவித்து பேசினர்.






