ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - விஜய்

உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்தவர் இயேசு கிறிஸ்து.
ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - விஜய்
Published on

இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடந்தன.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்தவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com