என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'யார் துரோகி'? - செங்கோட்டையனை நீக்க எடப்பாடிக்கு தகுதியே இல்லை - டி.டி.வி. காட்டம்
- செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி அல்ல.
- முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்கோட்டையன் பார்வையிட்ட பின்னரே ஜெயலலிதா ஒப்புதல் அளிப்பார்.
* செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி அல்ல.
* அ.தி.மு.க.விற்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் செங்கோட்டையன் ஈடுபடவில்லை.
* முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி.
* செங்கோட்டையனை தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி நீக்கியது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிவதற்கு சமம்.
* ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் என்னைப் பார்த்து துரோகி என எடப்பாடி பழனிசாமி பேசுவது சிரிப்பாக உள்ளது.
* யாரையும் துரோகி என சொல்லுவதற்கு கூட எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே இல்லை.
* செங்கோட்டையன் சொன்னதுபோல துரோகத்திற்கு நோபல் பரிசு பெறும் தகுதி இ.பி.எஸ்.-க்கு தான் உள்ளது.
* அ.தி.மு.கவிலிருந்து செங்கோட்டையனை நீக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. அவர் அழிவை தேடிக்கொள்கிறார்.
* தகுதியில்லாத எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை நீக்குவதா?
இவ்வாறு அவர் கூறினார்.






