என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    யார் துரோகி? - செங்கோட்டையனை நீக்க எடப்பாடிக்கு தகுதியே இல்லை - டி.டி.வி. காட்டம்
    X

    'யார் துரோகி'? - செங்கோட்டையனை நீக்க எடப்பாடிக்கு தகுதியே இல்லை - டி.டி.வி. காட்டம்

    • செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி அல்ல.
    • முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்கோட்டையன் பார்வையிட்ட பின்னரே ஜெயலலிதா ஒப்புதல் அளிப்பார்.

    * செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி அல்ல.

    * அ.தி.மு.க.விற்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் செங்கோட்டையன் ஈடுபடவில்லை.

    * முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி.

    * செங்கோட்டையனை தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி நீக்கியது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிவதற்கு சமம்.

    * ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் என்னைப் பார்த்து துரோகி என எடப்பாடி பழனிசாமி பேசுவது சிரிப்பாக உள்ளது.

    * யாரையும் துரோகி என சொல்லுவதற்கு கூட எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே இல்லை.

    * செங்கோட்டையன் சொன்னதுபோல துரோகத்திற்கு நோபல் பரிசு பெறும் தகுதி இ.பி.எஸ்.-க்கு தான் உள்ளது.

    * அ.தி.மு.கவிலிருந்து செங்கோட்டையனை நீக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. அவர் அழிவை தேடிக்கொள்கிறார்.

    * தகுதியில்லாத எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை நீக்குவதா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×