என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலையில் மகாதீபம் நிச்சயம் ஏற்றப்படும்- அமைச்சர் உறுதி
- சங்ககாலத்தில் இருந்து திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நடந்து வருவது வழக்கத்தில் இருக்கிற ஒன்று.
- தீபத்திருவிழாவை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.
சென்னை:
சட்டசபையில் உறுப்பினர் பிச்சாண்டி கேட்ட கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் கூறியதாவது:-
சங்ககாலத்தில் இருந்து திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நடந்து வருவது வழக்கத்தில் இருக்கிற ஒன்று.
இந்த ஆண்டும் இந்த தீப திருவிழாவில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கின்றது.
துணை முதலமைச்சர் 18-10-2024 அன்று நேரடியாக திருவண்ணாமலைக்கு சென்று கார்த்திகை தீபத்திற்கு கிரிவலப் பாதையிலே கள ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து சமீபத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
தீபத் திருவிழா என்பது மலையின் உச்சியின் மீது ஏற்றப்படுகின்ற கொப்பரை தீபம் என்பது இன்றியமையாத ஒன்று.
சான்றோர்கள் காலத்தில் இருந்து நடத்தப்படும் இந்த விழா தடைபடக்கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார்.
அந்த உத்தரவுக்கு ஏற்ப புவியியல் கமிட்டி சரவணன் ராஜா தலைமையிலே ஒரு குழு அமைக்கப்பட்டு எட்டு பேர் கொண்ட குழு. 7, 8 ,9 ஆகிய மூன்று நாட்கள் ஆய்வு செய்து இருக்கின்றது.
அந்த ஆய்வின் அடிப்படையில் இன்றைக்கு அறிக்கை தந்துள்ளனர்.
அந்த அறிக்கையின்படி 350 கிலோ கொண்ட கொப்பரை அந்த திரிகளை மேலே எடுத்துச் செல்ல வேண்டும்.
40 டன் கொண்ட சுமார் 450 கிலோ நெய்யும் எடுத்துக் செல்லப்பட வேண்டும் எவ்வளவு மனித சக்திகளை பயன்படுத்த முடியுமோ அதை பயன்படுத்தி எந்தவிதமான ஒரு சிறு உயிரிழப்பும் இல்லாமல் எந்தவிதமான சிறு அசம்பாவிதம் ஏற்படாமல் இந்த தீபத்திருவிழாவை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.
ஆகவே சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மனித சக்திகளை பயன்படுத்தி இந்த கார்த்திகை மகா தீபம் சான்றோர்களால் தொடங்கப்பட்ட இந்த தீபம் இந்தாண்டு தீப திருவிழாவிலும் மலை உச்சியின் மீது தீபம் எரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






