என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசியலமைப்பின் மாண்பை போற்றி பாதுகாத்தவர் சுதர்சன் ரெட்டி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- அரசியலமைப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்து கொண்டிருக்கிறது.
சென்னை வந்துள்ள இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
அவர், தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் சுதர்சன் ரெட்டியை ஏற்று கொண்டுள்ளனர்.
அரசியலமைப்பின் மாண்பை போற்றி பாதுகாத்தவர் சுதர்சன் ரெட்டி. அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார்.
அரசியலமைப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்து கொண்டிருக்கிறது.
புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக பேசியவர் சுதர்சன் ரெட்டி. தமிழகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தியவர் சுதர்சன் ரெட்டி.
முன்னாள் நீதியரசன் குறித்து நக்சல் என விமர்சிக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. பயங்கரவாதிகளை ஒழிக்க முடியாத அமித்ஷா, சுதர்சனை விமர்சிக்கிறார்.
அரசியல் எதிரிகளை பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது.
தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு தமிழன் என்ற முகமீடி அணிந்து ஆதரவு கேட்கின்றனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






