என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தாம்பரம்-திருச்சி சிறப்பு ரெயில் நீட்டிப்பு: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    தாம்பரம்-திருச்சி சிறப்பு ரெயில் நீட்டிப்பு: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    • சிறப்பு ரெயில் (06029), வரும் செப்டம்பர் 8-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06191), வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06030), வரும் செப்டம்பர் 7-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06029), வரும் செப்டம்பர் 8-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருச்சியில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06190), வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் (செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06191), வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் (மேற்கண்ட நாட்களில்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×