என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கீழடி குறித்த உண்மைகளை சில மனங்கள் ஏற்க மறுக்கின்றன- அமைச்சர் தங்கம் தென்னரசு
    X

    கீழடி குறித்த உண்மைகளை சில மனங்கள் ஏற்க மறுக்கின்றன- அமைச்சர் தங்கம் தென்னரசு

    • அறிவியல் ஆதாரங்களுடன் நம் மரபை மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம்.
    • ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன.

    அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழினத்தின் பெருமைக்கும், தொன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் எத்தனையோ தடைகளைக் கடந்து, அறிவியல் ஆதாரங்களுடன் நம் மரபை மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம். ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன. இத்தகைய மறுப்புகளை எதிர்கொள்ள, அறிக்கைகள் மட்டும் போதாது; மாறாக, சில மனங்களை மாற்ற வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

    நாளை மதுரை விரகனூரில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டின் உணர்வை உலகறியச் செய்ய பெருந்திரளாகக் கூடிட வேண்டும். ஒன்றிய அரசின் மறுப்புகளுக்கு எதிராக, நம் இனத்தின் உரிமைகளை உறுதியாக வெளிப்படுத்த முதலமைச்சர் ஆணையின் படி அழைக்கிறது மாணவர் அணி, வாழ்க தமிழ்!! வெல்க தமிழ்! என கூறினார்.

    Next Story
    ×