என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2026-ல் மக்கள் சக்தியால் விஜய் ஆட்சி பீடத்தில் அமருவார்  - செங்கோட்டையன் உறுதி
    X

    2026-ல் மக்கள் சக்தியால் விஜய் ஆட்சி பீடத்தில் அமருவார் - செங்கோட்டையன் உறுதி

    • விஜயுடன் கலந்து பேசி என்ன முடிவுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவர் கருத்தை கேட்டுச் சொல்கிறேன்.
    • இன்று மக்கள் இருக்கின்ற மனநிலையில் அவர்களுக்கு ஒரு புதிய இயக்கம் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வில் இணைபவர்கள் குறித்து வெளியே சொன்னால் பிரச்சனை உருவாகும். நேற்று தான் கட்சியில் இணைந்துள்ளேன். இனிதான் பிரசாரம் செய்ய வேண்டும். இன்று சொந்த நிகழ்வுக்காக கோவை செல்கிறேன்.

    அதில் கலந்துகொண்டு வந்த பின், விஜயுடன் கலந்து பேசி என்ன முடிவுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவர் கருத்தை கேட்டுச் சொல்கிறேன்.

    நான் எப்படி செயல்பட்டு இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எந்த நிலையில் நின்று பாடுபடுவேன் என்று நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகத்தில் வெற்றி நடை போடுவதற்கு அயராது உழைப்பேன்.

    விஜயுடன் இணைந்து கோபி செட்டிபாளையத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வது தொடர்பாக விரைவில் அவருடன் கலந்து பேசி எப்படி பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்வேன்.

    இன்று மக்கள் இருக்கின்ற மனநிலையில் அவர்களுக்கு ஒரு புதிய இயக்கம் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. மக்களால் நேசிக்கப்படுகிற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்றைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.

    2026-ம் ஆண்டு மக்கள் சக்தியால் விஜய் ஆட்சி பீடத்தில் அமருகிற காலம் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செங்கோட்டையன் இன்று தனது வீட்டை விட்டு வெளியே சென்றபோது தனது வாகனத்தில் த.வெ.க. கட்சிக்கொடி கட்டி இருந்தார்.

    Next Story
    ×