என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்- செங்கோட்டையன்
- என்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதால் பாதிப்பா என்றால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
- கட்சி நலன் மற்றும் ஆட்சி அமைப்பதற்காக தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தேன்.
கோபி:
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் என்னிடம் தொலைபேசியில் பேசினர்.
* அ.தி.மு.க. தொண்டர்களின் உணர்வை தான் நான் வெளிப்படுத்தினேன்.
* அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து என்னை நீக்குவதற்கு முன்னதாக என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.
* என்னிடம் விளக்கம் கேட்காமல் கட்சி பொறுப்பில் இருந்து என்னை நீக்கியுள்ளனர்.
* கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
* காலில் விழுகிறோம் என கூறியவர்களையே ஏற்காமல் புறக்கணித்து விட்டனர்.
* என்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதால் பாதிப்பா என்றால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
* கட்சி நலன் மற்றும் ஆட்சி அமைப்பதற்காக தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தேன்.
* ஒன்றிணைந்தால் சட்டமன்ற தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம் என அ.தி.மு.க. தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
* அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எண்ணத்தை யார் தான் வெளிப்படுத்துவது? என வினா எழுப்பினார்.
அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது முதல் அவரது ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.






