என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமர் மோடி பாராட்டும் ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி - செல்லூர் ராஜூ புகழாரம்
    X

    பிரதமர் மோடி பாராட்டும் ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி - செல்லூர் ராஜூ புகழாரம்

    • பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை எப்போது விரட்டலாம் என மக்கள் காத்திருக்கிறார்கள்.
    • போதைப்பொருள் கடத்தலில் இருப்பவர்கள் எல்லாம் தி.மு.க.வினர் தான்.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அதி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    அதிகார வர்க்கத்திலிருந்து தொழிலாளர்களை காப்பதற்காக வேலை நேரத்தை 8 மணி நேரமாக உருவாக்கி, தொழிலாளர் நலன் காக்க இந்த மே தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் அதி.மு.க. சார்பில் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாட்டில் தான் மே தினத்தை நமது முன்னோர்கள் கொண்டாடினர். உழைக்கும் வர்க்கத்தை மேற்கோள் காட்ட மெரினாவில் சிலை வைத்தனர்.

    விடியல் தருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் 5 சதவீத சம்பள உயர்வு தான் கொடுத்து உள்ளனர். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை அறிவித்து வாயில் தான் வடை சுடுகிறார் .

    பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை எப்போது விரட்டலாம் என மக்கள் காத்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் மட்டும் தான் 234 தொகுதியிலும் ஜெயிப்போம் என கூறிவருகிறாரே தவிர மக்களை நினைக்கவில்லை.

    பா.ஜ.க.வுடன் அதி.மு.க. கூட்டணி வைத்தால் மட்டும் மு.க.ஸ்டாலின் கொதித்து பேசுகிறார். நீங்க கூட்டணி வைத்தால் மட்டும் இனிக்கும். கூடாநட்பு கேடில் முடியும் என உங்கள் அப்பாவே காங்கிரஸ் கட்சி குறித்து பேசியுள்ளார். பிறகு ஏன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தீர்கள்.

    தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கும் கூட்டணியில் உள்ள மார்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை மக்களுக்கு ஆதரவாகவும், ஆட்சிக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறதா? தி.மு.க.வுக்கு ஆதரவாகத்தான் கம்யூனிஸ்டு கட்சிகள் செயல்படுகிறது. தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்கிறேன் என கூறி ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பதாக போராட்டம் நடத்தி வரு கின்றனர்.

    தி.மு.க. தலைமையிலான அமைச்சரவை ஜாமின் பெற்ற அமைச்சரவை. அமைச்சர்கள் முழுவதும் வாய்தாவுக்கு சென்று வருகிறார்கள். தி.மு.க. அமைச்சர்களை பொறுத்த வரையில் கலெக்ஷன், கரப்சன் தான். அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பெண்களை இழிந்து பேசுவதும், தாழ்த்தப்பட்ட பெண் கவுன்சிலரை அவமரியாதை செய்வதும், பெண்களை ஓசி என கூறியதற்கு இன்றைக்கு எங்க அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் பொன்முடி என்றைக்கோ ஜெயிலுக்கு போயிருப்பார்.

    பாரத பிரதமரே இந்திய முதல்வர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என பாராட்டிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.

    போதைப் பொருள் கடத்தலில் இருப்பவர்கள் எல்லாம் தி.மு.க.வினர் தான். குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில் தமிழக காவல்துறை இருந்து வருகிறது. உண்மையான விடுதலை, விடியலை வரும் 2026-ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உழைப்பாளர் தினத்தில் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×