காவலாளி கொலை வழக்கை கண்டித்து திருப்புவனத்தில் நாளை சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு

கடந்த 3-ந்தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது.தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார்.
காவலாளி கொலை வழக்கை கண்டித்து திருப்புவனத்தில் நாளை சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
Published on

மதுரை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல் துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு போலீசாரால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணத்துக்குநீதி வேண்டும்.

அதேபோல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப்பொறுப் பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழும் காவல்நிலைய படுகொலைகளை தடுக்க கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜூலை 8-ந்தேதி மாலை 4 மணிக்கு திருப்புவனம் சந்தைத்திடல் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தலைமை தாங்க உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி அறிவித்து இருந்தது.

இந்தநிலையில் சீமானின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஏற்கனவே அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக கடந்த 3-ந்தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது.

மேலும் நாளை சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் தேரோட்டம் நடைபெறுவதுடன், திருப்புவனத்தில் வாரச்சந்தை கூட உள்ளதால் பாதுகாப்பு கருதி நாளை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருந்தபோதிலும் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com