என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ம.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிக்க எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது- ராமதாஸ்
    X

    பா.ம.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிக்க எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது- ராமதாஸ்

    • கடைசி மூச்சு வரை பாட்டாளி மக்களுக்காக உழைப்பேன்.
    • பா.ம.க.வை பெரிய கட்சியாக உருவாக்கியது நான் தான்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் 5 லட்சம் மகளிர்கள் பங்கு பெறும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டிற்கு வரும் மகளிர் பாதுகாப்பாக வரவேண்டும்.

    அன்புமணி நிறைய பொய்களையும் கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார். அன்புமணி தைலாபுரத்தில் தன்னை சந்திக்க வந்ததாகவும் நான் கதவை மூடிக்கொண்டு பார்க்க மறுத்ததாக அன்புமணி தெரிவித்துள்ளார். என்னை அவர் சந்திக்கவும் வரவில்லை, நான் கதவையும் அடைக்கவில்லை. நான் ஏன் பேச மறுக்கிறேன்? 46 ஆண்டு காலம் கட்டி காப்பாற்றிய கட்சியை அன்புமணியிடம் ஏன் கொடுக்க வேண்டும்? கட்சி நிர்வாகிகள் யாரையும் என்னை சந்திக்கக்கூடாது என அன்புமணி தெரிவிக்கிறார்.

    கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. சின்னமும் இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்று சொல்லி நான் தலைமை ஏற்கிறேன் என கூறினேன். அதை அன்புமணி ஏற்றுக் கொள்ளவில்லை.

    மேலும் கட்சியில் உள்ள பொறுப்பாளர்களை நியமிக்கவும், நீக்கவும் எனக்கு தான் அதிகாரம் உள்ளது. அன்புமணிக்கு அதிகாரம் இல்லை.

    பா.ம.க.வை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு தைலாபுரம் இல்லதில் கதவை சாத்திகொண்டு கொள்ளு பேரன்களிடம் விளையாடுவதை ஏற்க முடியாது. கடைசி மூச்சு வரை பாட்டாளி மக்களுக்காக உழைப்பேன். மக்கள் என் மேல் உயிரை வைத்துள்ளார்கள். வஞ்சனையால், சூதுவால் உறிஞ்சி எடுத்து பா.ம.க.வை அன்புமணி எடுத்து கொள்வேன் என்கிறார்.

    பா.ம.க.வினர் தன்னை நிறுவனராக பார்க்க மாட்டார்கள். என்னை கடவுளாக பார்க்கின்றனர். அப்படி பார்த்தவர்களை எனக்கு எதிராக பணத்தை கொடுத்து அவர் பக்கம் வைத்துள்ளார். ராமதாஸ் விதையை போட்டு தண்ணீரை ஊற்றி வளர்க்கவில்லை, வேர்வையை ஊற்றி ஆலமரமாக வளர்த்தேன். அதன் கிளையை வெட்டி கோடாரி செய்து ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார். கட்சியின் வளர்ச்சிக்காக அன்புமணி எதையும் செய்யவில்லை.

    பா.ம.க.வை பெரிய கட்சியாக உருவாக்கியது நான் தான். அன்புமணிக்கு எந்த குறையும் வைக்கவில்லை. நல்ல பள்ளியில் பயில வைத்து, எம்.பி.யாக்கி, ராஜ்யசபா உறுப்பினராக்கி, எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்தேன்.

    தன்னை யாரும் பார்க்கக்கூடாது என்று பணத்தை கொடுத்து வருகிறார். காசு கொடுத்து கட்சிக்காரர்களை பொருளை விலைக்கு வாங்குவது போல் அன்புமணி செய்கிறார். தருமபுரியில் சுப்ரமணி ஓ.கே.எஸ். என்னை சந்திக்க வந்தபோது அவருக்கு தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஷ், ரூ.5 ஆயிரம் கொடுத்து தடுத்தார். இதுபோன்று என்னை சந்திக்க வருபவர்களை சந்திக்க விடாமல் நிறைய வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் ஓ.கே.எஸ். அந்த பணத்தை எம்.எல்.ஏ. முகத்தில் வீசிவிட்டு என்னை சந்தித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×