என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அன்புமணி சூது செய்து கட்சியை பறிக்க முயல்கிறார்- ராமதாஸ் குற்றச்சாட்டு
    X

    அன்புமணி சூது செய்து கட்சியை பறிக்க முயல்கிறார்- ராமதாஸ் குற்றச்சாட்டு

    • அன்புமணிக்கு வழங்கிய பா.ம.க. தலைவர் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்தோடு காலாவதியாகி விட்டது.
    • பாட்டாளி சொந்தங்கள் என்னை நிறுவனராக மட்டும் பார்ப்பதில்லை, சிலர் என்னை கடவுள் என்கிறார்கள்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * என்னை சந்திக்க வந்ததாகவும் நான் மறுத்ததாகவும் அன்புமணி பொய் சொல்கிறார்.

    * தைலாபுரம் இல்லத்திற்கு என்னை சந்திக்க அன்புமணி வரவும் இல்லை, நான் கதவை அடைக்கவும் இல்லை.

    * கட்சியை உறிஞ்சி எடுத்து, நான் தான் கட்சி என்று சொல்ல அன்புமணி துடிக்கிறார்.

    * அன்புமணிக்கு வழங்கிய பா.ம.க. தலைவர் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்தோடு காலாவதியாகி விட்டது.

    * அன்புமணிக்கு செயல்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. களத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்க கூறினேன்.

    * களத்திற்கு சென்று தொண்டர்களை சந்திக்காமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார் அன்புமணி.

    * நான்தான் தலைவர் என்று சொல்லி கொண்டு என்னவெல்லாமோ செய்கிறார் அன்புமணி.

    * பாட்டாளி சொந்தங்கள் என்னை நிறுவனராக மட்டும் பார்ப்பதில்லை, சிலர் என்னை கடவுள் என்கிறார்கள்.

    * பை பையாக பொய்களை வைத்துள்ளார் அன்புமணி. வாய் கூசாமல் பொய் சொல்வார் அன்புமணி.

    * அன்புமணி வஞ்சனையாலும் சூது செய்தும் கட்சியை பறிக்க முயல்கிறார்.

    * பா.ம.க.வின் நிறுவனரும், தலைவரும் நானே என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

    Next Story
    ×