என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இரு மதங்களுக்கு இடையேயான மோதல்களை நிறுத்தியவர் போப் பிரான்ஸிஸ்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    இரு மதங்களுக்கு இடையேயான மோதல்களை நிறுத்தியவர் போப் பிரான்ஸிஸ்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • மறைந்த போப் ஆண்டவருக்கு இதயப்பூர்வ அஞ்சலி செலுத்துகிறேன்.
    • போப் பிரான்சிஸ் அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக திகழ்ந்தவர்.

    சென்னை லயோலா கல்லூரியில் மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போப் பிரான்சிஸ் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    மறைந்த போப் ஆண்டவருக்கு இதயப்பூர்வ அஞ்சலி செலுத்துகிறேன்.

    போப் பிரான்சிஸ். அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக திகழ்ந்தவர்.

    கிறிஸ்தவ மதத் தலைவராக இருந்தாலும், அனைவராலும் போற்றப்பட்டவர், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.

    இரு மதங்களுக்கு இடையேயான மோதல்களை நிறுத்தியவர் போப் பிரான்ஸிஸ்.

    மதங்களை கடந்த தன்மை அனைத்து மதங்களையும் ஒன்றாக கருதும் தன்மை கொண்டவர்.

    அணு ஆயுதங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்ந்தவர்.

    அன்பு தான் மதங்களின் அடையாளமாக மாற வேண்டும் என்று விரும்பியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×