என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இயற்கை வேளாண் மாநாட்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    X

    இயற்கை வேளாண் மாநாட்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    • கோவை கொடிசியா மைதானத்திற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    கோவை:

    கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    இதற்காக அவர் இன்று மதியம் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பு அளித்தனர். விழா நடைபெறும் கோவை கொடிசியா மைதானத்திற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மாநாட்டு அரங்குக்குள் சென்றார்.

    முதலில் மாநாட்டு அரங்கில் விவசாயிகள் சார்பில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் இடம் பெற்ற 17 கண்காட்சி அரங்குகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    Next Story
    ×