என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க.விற்கு கொள்கையில்லையா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி
    X

    த.வெ.க.விற்கு கொள்கையில்லையா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி

    • அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னென்ன செய்கிறார்கள்?
    • மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை மறந்தது யார்?

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற த.வெ.க. தலைவர் விஜய், 'நாட்டுக்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே கண்ணா இருந்தார் என எம்.ஜி.ஆர். பாடலை பேசியதாவது:-

    * அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னென்ன செய்கிறார்கள்?

    * மிகப்பெரிய மனவேதனைக்குப் பின்னர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

    * தனிப்பட்ட முறையில் தி.மு.க. மீது எந்த வன்மமும் இல்லை.

    * மக்களை பொய் சொல்ல ஏமாற்றி ஆட்சி வந்த தி.மு.க.வை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?

    * மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை மறந்தது யார்?

    * த.வெ.க.விற்கு கொள்கையில்லை என பேசுகிறார் தமிழக முதலமைச்சர்.

    * பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா?

    * கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என கூறிய த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா? என்று பேசி வருகிறார்.

    Next Story
    ×