என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்கவில்லை- நயினார் நாகேந்திரன்
- தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும்.
- எனது பிரச்சார பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா பங்கேற்பார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:-
இதுவரையிலும் எந்த கட்சியோடும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் உத்தேச தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் தரவில்லை.
தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.
எனது பிரச்சார பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா பங்கேற்பார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






