என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜி.எஸ்.டி. மூலம் மக்களுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் பயன் கிடைத்துள்ளது - நிர்மலா சீதாராமன்
- 2017-ம் ஆண்டு 65 லட்சம் மக்கள் ஜி.எஸ்.டி.யில் இணைந்தார்கள்.
- தற்போது 1.51 கோடி மக்கள் ஜி.எஸ்.டி.யில் உள்ளார்கள்.
ராயப்பேட்டை:
சென்னை ராயப்பேட்டையில் ஜி.எஸ்.டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
* ஜி.எஸ்.டி. மூலம் மக்களுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் பயன் கிடைத்துள்ளது.
* ஒட்டுமொத்தமாக 22.08 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிற்கு ஜி.எஸ்.டி மூலம் வருமானம் கிடைத்துள்ளது.
* 2017-ம் ஆண்டு 65 லட்சம் மக்கள் ஜி.எஸ்.டி.யில் இணைந்தார்கள். தற்போது 1.51 கோடி மக்கள் ஜி.எஸ்.டி.யில் உள்ளார்கள்.
* மாநிலங்கள் சேர்ந்துதான் ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
Next Story






