என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்தமைக்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்- நயினார் நாகேந்திரன்
    X

    தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்தமைக்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்- நயினார் நாகேந்திரன்

    • கடந்த ஆண்டை விடை இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
    • தமிழ்நாடு முன்னாள் மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு பதவி விரைவில் கொடுப்பார்கள்.

    திருச்சி:

    பா.ஜ.க. சார்பில் பிரதமர் மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தேசியக்கொடி ஏந்தி ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப் பேரணி இன்று மாலை திருச்சியில் நடக்கிறது. ஊர்வலம் வழி விடு வேல்முருகன் கோவிலில் இருந்து புறப்பட்டு மேஜர் சரவணன் ரவுண்டானாவில் முடிகிறது.

    பேரணி முடிவில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் மூலம் திருச்சி வருகை தந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சி கொலை வழக்கில் பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தினந்தோறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, மது பழக்க வழக்கம், பாலியல் வன்கொடுமைகள் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டை விடை இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு அடிப்படை காரணம் மது பழக்க வழக்கம் தான். தமிழ்நாடு அரசு குற்ற சம்பவங்களை தடுக்க எந்த கவனத்தையும் செலுத்தவில்லை.

    கொடநாடு கொலை வழக்கில் எங்களை பொறுத்தவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எங்களது எண்ணம். சென்னையில் நடைபெற்ற பேரணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து திருச்சியில் இன்று நடைபெறும் பேரணியில், கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க. கொடி எங்கேயும் கட்ட மாட்டோம். அனைவரும் தேசியக் கொடியேந்தி ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் அமைதியான முறையில் பேரணி நடைபெறும்.

    தேர்தல் வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பேசுவோம். தமிழ்நாடு முன்னாள் மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு பதவி விரைவில் கொடுப்பார்கள்.

    இவ்வாறூ அவர் கூறினார்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன், திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஒண்டி முத்து, புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் கவுதம் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி.முரளிதரன், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் அழகேசன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீராம் சங்கர், கூட்டுறவு பிரிவு எம்பயர் கணேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், எம்.ஆர்.கோபிநாதன், மாவட்ட செயலாளர் சதீஷ், உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ், ஜி.டி. தினகர், கற்பகம் அரிசி மண்டி குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×